ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த டி.சி.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் திவ்யபாரதி(25). திவ்யபாரதிக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், அதே பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனை திவ்யபாரதியின் தந்தை கிருஷ்ணன் தட்டிக் கேட்கவே அவர் மீது கிருபாகரன் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மது போதையில், சொந்த ஊருக்கு செல்லும் வழியில் கிருஷ்ணனை பார்த்த கிருபாகரன், அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கிருஷ்ணனின் வீட்டிற்கு நேரடியாக சென்று, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.
- சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 915022344.

No comments:
Post a Comment