ராணிபேட்டை மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்நிறுவனங்கள்துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024.கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று (28.11.2023) ராணிப்பேட்டை நகராட்சி முத்துக்கடை, S.K மஹாலில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழிற் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 முன்னிட்டு தொழிற் நிறுவனங்கள் தொழில் துவங்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான நடைபெற்ற பெருந்திரள் கூட்டத்தில் உரையாற்றினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஆனந்தன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பிரசன்ன குமார், நகரமன்றத் தலைவர்கள் சுஜாதாவினோத், முஹமது ஹமீன்,ஹரிணி தில்லை, தமிழ்ச்செல்வி அசோகன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், அசோக், நிர்மலா சௌந்தர், ராணிடெக் தலைவர் ரமேஷ் பிரசாத், குறு சிறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவன சங்க செயலாளர் முரளி மற்றும் பலர் உள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment