ஆறுமுகம் சாமி மடத்தில் இயற்கை மருத்துவ தினம் முன்னிட்டு மருத்துவ முகாம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 18 November 2023

ஆறுமுகம் சாமி மடத்தில் இயற்கை மருத்துவ தினம் முன்னிட்டு மருத்துவ முகாம்.

வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் பின்புறம் ஆறுமுகம் சாமி மடத்தில் இயற்கை மருத்துவ தினம் முன்னிட்டு ஏபிஜே அப்துல் கலாம் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நல சங்கம் மற்றும் வாலாஜாபேட்டை தலைமை மருத்துவமனை இயற்கை மருத்துவம் வாழ்வியல் மையம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் இதில் மருத்துவர் டாக்டர் சசிரேகா அவர்கள்சிகிச்சை உதவியாளர் ஜானகி பணி உதவியாளர் தமிழ்ச்செல்வி அவர்கள் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.


இந்த முகாமை துவக்கி வைத்தவர் இணை இயக்குனரின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பி விவேக்குமார் அவர்கள் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக லயன்ஸ் கிளப் இன் ராணிப்பேட்டை மாவட்ட செகரட்டரி லயன் கௌரிசங்கர் அவர்கள் ரெட் கிராஸ் குமார் ரெட் கிராஸ் வேலு அவர்கள் மற்றும் குமரன் ரவிசங்கர் அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் பி மதன்குமார் மற்றும் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு இந்த முகாமை சிறப்பித்தனர், இதனை சிறப்பாக நடத்தி தந்த ஆட்டோ சங்கர் தலைவர் ஏ குமரேசன் மற்றும் எஸ் அலிம் அகமத் சமூக ஆர்வலர் அவர்களுக்கும் ஆட்டோ சங்கத்திற்கும் மருத்துவர் சசிரேகா அவர்கள்  சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad