ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்விஷாரம் ஹாஜி ப்பேட்டை 1வது தெருவில் 26.11.2023 அன்று இரவு ஆதாம் பாஷா என்பவரின் வீட்டினுள் பீரோவை உடைத்து அதில் உள்ள நான்கு சவரன் தங்க நகைகள் திருடு போனது சம்பந்தமாக ஆதம்பாசா வயது 42 s/o அப்துல் சமீர் ஹாஜி பேட்டை 1 வது தெரு மேல்விஷாரம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரண் சுருதி IPS அவர்களின் வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு பிரபு அவர்களின் மேற்பார்வையில் ஆற்காடு நகர காவல் வட்ட ஆய்வாளர் திரு விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையிலான தனிப்படை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் இன்று 29.11.2023 ஆம் தேதி பகல் 12 மணி அளவில் கீழ்விஷாரம் குளத்துமேடு பஸ் ஸ்டாப் அருகில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக கூறியதால் அவர்களின் இருசக்கர வாகனத்தை சோதனை இட்டபோது அதில் மேல்விஷாரம் ஹாஜி பேட்டை 1 வது தெருவில் திருடப்பட்ட நகை என்று தெரியவந்தது மீண்டும் விசாரிக்க அவர்கள் தங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு திருடப்பட்ட நகைகளை ஒப்படைத்தனர்.
அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றப்பட்டது அவர்களது பெயர் விலாசம் விசாரிக்க 1. பைரோஸ் வயது 21 S/O அஷ்ரப் அலி ஹாஜி பேட்டை 1வது தெரு மேல்விஷாரம் 2. அமீன் பாஷா வயசு 24 S/O அசன் காயிதே மில்லத் தெரு மேல்விஷாரம் என்று தெரியவந்தது அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து நான்கு சவரன் தங்கங்கள் நகைகள் திருட்டுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டது அதன் மொத்த மதிப்பு சுமார் 2 லட்சம் ஆகும் எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment