தமிழகத்தின் முதல் நகராட்சி வாலாஜா நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தேசிய திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 28 November 2023

தமிழகத்தின் முதல் நகராட்சி வாலாஜா நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தேசிய திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் பாரம்பரியமிக்க பழமை வாய்ந்த தாழ் தமிழகத்தின் முதல் நகராட்சி என்ற பெருமை உள்ள நகராட்சியின் அவலங்களை சொல்லி வாழ முடியவில்லை, வாலாஜா நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து இன்று தேசிய திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் சோளிங்கர் யுவராஜ் தலைமையில் வாலாஜா பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் நித்யா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் பெண்கள் ஆண்கள் ஏன 400 மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் பாட்டாளி மக்கள் கட்சி நாம் தமிழர் இந்து முன்னணியினர் ஹிந்து மக்கள் கட்சி பல சமூக ஆர்வலர்கள் பல கட்சிகள் இதுவரை கடந்த பல மாதங்களாக தொடர்ந்து நகராட்சிக்கு எதிராக பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது, இருந்தும் இது நாள் வரை மாவட்ட அமைச்சரும் மாவட்ட ஆட்சியரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்தக்க செய்தி இதுதான் நிஜமான உண்மை ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை தொடர்ந்து ஊழலில் தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் நகராட்சி என்ற பெருமை உண்டு ஆக்கிரமிப்புகளில் பாரபட்சம் ஏழை பணக்காரர் என்பதை பாரபட்சம் அரசியல்வாதிகளின் பாரபட்சம் என அனைத்து வேலைகளிலும் பாரபட்சமாகவே செயல்படுகிறது என்பதுதான் நிஜத்தமான உண்மை. இனியாவது கண்டிப்பாக மாவட்ட அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என சமூக ஆர்வலர்கள் பலதரப்பட்ட பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad