முன்னதாக மூலவர் காமாட்சி அம்பாள் ஏகாம்பரநாதர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதிகாலை 3 மணி அளவில் உற்சவர் ஆனந்த நடராஜருக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், கதம் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், விபூதி, உள்ளிட்ட 50 வகையிலான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று நடராஜர் சுவாமிக்கு பல்வேறு வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை கொண்டு அலங்கரித்து சிவாச்சாரியார்கள் சோடா உபசாரங்கள் செய்து பல்வேறு மங்கள தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து சுவாமி ஆலயத்தில் இருந்து சிவமேளம் செண்டைமேளம் ,கேரளா மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட மேலதாளங்கள் முழங்க ரதத்தில் கம்பீரமாக அமர்ந்தபடி பட்டாசு வெடித்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஆருத்திரா தரிசன வழாவில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நமசிவாய.. நமசிவாய.. நமசிவாய.. என பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேர் ரதத்தை வடம் பிடித்து இழுத்து சென்று சுவாமியை வழிபட்டனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு. 9150223444.
No comments:
Post a Comment