இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமத்தில் சட்டையடிப்பவர்களை 1 ஆண்டு காலமாக முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர், ஆரம்ப காலம் முதலே இவர்களை கிராமத்தில் தங்கவைக்கக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சமீப காலமாக மது அருந்திவிட்டு வழியில் செல்லும் மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள்களை தொந்தரவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் கிராமத்தை சேர்ந்த 7 பேர் மீது கல் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்தவர்களை வாலாஜா அரசு தலைமை மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர், மேலும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அனைவரும் நிரந்தரமாக கிராமத்தை விட்டு அனுப்ப வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர், இந்த நிலை இப்படியே நீடுக்குமானால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர், இது குறித்து அவளூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment