ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பாக நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கைகளில் தேங்காய்களை ஏத்தியபடி அரசின் கவனம் இருக்கும் விதமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பாஜக கட்சியின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது, மேலும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது தமிழக தென்னை விவசாயிகளை காப்பாற்றும் வகையில் NAFED நிறுவனத்தில் இருந்து தேங்காய் கொப்பரைகளை தமிழக கூட்டுறவு சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்யவும் மேலும் தமிழக நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்கும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கைகளில் தேங்காய்களை எழுதியபடி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் ராணிப்பேட்டை விவசாய அணி தலைவர் வெங்கடேசன்ஜி தலைமையில் சிறப்பு அழைப்பார்கள் விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஜி மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன் ஜி அரக்கோணம் பாராளுமன்ற பொருப்பாளர் ரவிச்சந்திரன் ஜி அரக்கோணம் பாராளுமன்ற இணை பொருப்பாளர் தசரதன் ஜி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் பிரகாஷ்,மாநில பொது செயற்குழு உறுப்பினர் அருள்மொழி, சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்ஜே சுரேஷ்குமார், மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள மண்டல் நிர்வாகிகள் அனைத்து அணி பிரிவில் நிர்வாகிகள் 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
No comments:
Post a Comment