மாவட்ட அளவிலான சிறு தானிய உணவு கண்காட்சி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 27 December 2023

மாவட்ட அளவிலான சிறு தானிய உணவு கண்காட்சி.


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான சிறுதானிய உணவு கண்காட்சி நிகழ்வு நடைபெற்றது, இதில் மகளிர் சுய உதவி குழுக்கள் வட்டார அளவிலான கூட்டமைப்புகள் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள் அங்கன்வாடி பணியாளர்கள். விவசாயத்துறை வேளாண்மை துறை கல்லூரி மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பாரம்பரிய சிறுதானியங்களில் பல வகையான உணவு பூக்கள் தயாரித்து கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்  மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் ஆகியோ கலந்து கொண்டு சிறுதானிய உணவுப் பொருட்களை பார்வையிட்டு சவித்து பார்த்து பரிசுகள் வழங்கினார்.


இதில் பள்ளி மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டான சிலம்பு சுருள் போன்ற விளையாட்டுகள் கண்காட்சிக்காக வருகை தந்த மக்களுக்கு செய்து காண்பித்தனர் இதில் ஏராளமான துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு :9150223444

No comments:

Post a Comment

Post Top Ad