ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரத்தில் உள்ள குளோபல் பேட்மிண்டன் அகாடமியில் மேல்விஷாரம் பேட்மிண்டன் அசோசியேஷன் சார்பில் மேல்விஷாரம் பேட்மிண்டன் லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் வி.அப்துல் ஹசிப் இம்ரான் மற்றும் எப்.காதர் ஷெரிப் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். அப்போது அசோசியேஷன் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பேட்மிண்டன் வீரர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment