கலவை அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 26 December 2023

கலவை அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை.


ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள செங்கனாவரம் பகுதியை சேர்ந்தவர் அரிவெங்கடாசலம் (83) சரஸ்வதி இவர்களுக்கு 4 மகன், 4 மகள்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடைசி மகனான  மகேஸ்வரன் (34) திருமணம் ஆகாத இருந்த விரக்தியில் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று 25.12.23 அன்று அதிகம் மது குடித்துவிட்டு சண்டை போட்டதோடு வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து தீ குளித்துள்ளார் அப்போது மகேஸ்வரன் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்கக வேலூர் அடுக்கும்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


இது தொடர்பாக கலவை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad