ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தபால் நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் நாகராஜன், தலைமையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, நாடாளுமன்றத் கூட்டத்தொடரில் இருந்து திருமாவளவனை, இடைநீக்கம் செய்ததை கண்டித்து தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர ஒன்றிய கிளைக் கழக செயலாளர்கள உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்....

No comments:
Post a Comment