விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய ராணிப்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 29 December 2023

விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய ராணிப்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.


ராணிப்பேட்டை மாவட்டம் தேமுதிக கட்சியின் தலைவரும் சிறந்த நடிகருமான விஜயகாந்த் நேற்று உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் பிரபு என்கிற பிரபாகரன் தலைமையில்  ஆற்காடு பேருந்து நிலையம்  அம்பேத்கர் சிலை அருகில்  விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு  மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட பொருளாளர் நல்லூர் சம்பத்,ஆற்காடு நகர செயலாளர் ராஜன், திமிரி நகர செயலாளர் ஏழுமலை, ஒ.செ. மேச்சேரி சீனிவாசன், உ.ஆனந்தன், அருண், சந்தோஷ், அசோக், சக்கரவர்த்தி, அன்பு, அரும்பாக்கம் ஆனந்தன்  கலை, உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக செயலாளர் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad