முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாம் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்பு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 29 December 2023

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாம் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்பு.


கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி, அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாமில் 1937 பயனாளிகளுக்கு ரூ.20.25 கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், முழு பரப்பு பட்டா மாறுதல் உத்தரவும், உட்பிரிவு செய்யப்பட்ட (பகுதி பரப்பு) பட்டா மாறுதல் உத்தரவும் வழங்கினார்கள். 

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் மனோன்மனி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயந்திதிருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் முஹமது ஹமீன், ஹரிணி தில்லை, ஒன்றியக் குழுத் தலைவர்கள் புவனேஷ்வரி சத்தியநாதன், சே.வெங்கட்ரமணன், பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ் மற்றும் பலர் உள்ளனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad