ராணிப்பேட்டை மாவட்டம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்ததை தொடர்ந்து நெமிலி அதிமுக பொருளாளர். நவநீதகிருஷ்ணன் தலைமையில் எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் அதிமுகவின் நெமிலி நகர செயலாளர். செல்வம், நெமிலி மேற்கு ஒன்றிய மாணவர் அணி. முருகன், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment