சோளிங்கர் அருகே ஏ எல் சாமி நகர் பத்மாபுரம் கிராமத்தில் உள்ள மூகாம்பிகை திருக்கோயிலில் 13 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு 501 பால்கூட ஊர்வலம் நடைபெற்றது, இறையொட்டி சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் இருந்து ஊர்வலமாக காந்தி சாலை அண்ணா சாலை வாலாஜா சாலை எ எல் சாமி நகர் வழியாக 5001 பால் குடங்களை மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு பாலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment