ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் பைக் பழுதுபார்ப்போர் உரிமையாளர் சங்கத்தின் முதலாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பைக் பேரணி சங்கத்தின் தலைவர். மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர். குமார், செயலாளர். சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி சப்- இன்ஸ்பெக்டர். சிரஞ்சீவிலு கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியானது ஓச்சேரி- அரக்கோணம் செல்லும் சாலையில் தொடங்கி பேருந்து நிலையம் வரை சென்றது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்தவாறு பைக் ஓட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment