வாலாஜா வட்டம் முசிறி சாலையில் அமைந்துள்ள DP ஜெயின் என்ற கிரஷர் கம்பெனியில் பாறை உடைப்பதற்காக வைத்திருந்த சுமார் 20 இலட்சம் மதிப்புள்ள Rock breaker 10.11.2023 ம் தேதி இரவு திருடு போய் விட்டதாக அந்த கம்பெனி உரிமையாளர் வாலாஜா காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட வாலாஜாபேட்டை காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு அவர்களின் உத்திரவின் பேரில் காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா அவர்களால் வாலாஜாபேட்டை காவல் சார்பு ஆய்வாளர் மகாராஜன் அவர்கள் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கபட்டு காணாமல் போன பொருளை தேடியதில் கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி திருப்பத்தூரை சேர்ந்த சரத்குமார் என்பவரை விசாரணை செய்ததில் அவர் தான் திருடியதை ஒப்பு கொண்டு மேலும் தான் திருடிய பொருளை போலிசாரிடம் ஒப்படைத்தார், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் DV.கிரண் சுருதி ஆய்வாளர் சாலமன் ராஜா பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
No comments:
Post a Comment