ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அசமந்தூர் ஊராட்சியில் எம். எல். ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை ரோடு அமைக்கும் பணி மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தண்ணீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றது. அரக்கோணம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜி. பழனி, அசமந்தூர் ஊராட்சி மன்ற தலைவர். ஜெ. தீனதயாளன், அசமந்தூர் கிளை கழக செயலாளர். துர்காசலம் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான. சு. ரவி இவ்விழாவில் கலந்துகொண்டு ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதில் அதிமுகவின் ஒன்றிய விவசாய அணி செயலாளர். பாலு, ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர். பாபு, ஒன்றிய அவைத் தலைவர். சுப்பிரமணி, ஒன்றிய இளைஞரணி செயலாளர். ராஜா, அசமந்தூர் கிளை கழக செயலாளர்கள். சுதாகர், நாகபூசணம், மாரிமுத்து, ராஜேந்திரன், ஒன்றிய கழகப் பொருளாளரும், முன்னாள் கவுன்சிலர். கோவிந்தராஜ், மாணவர் அணி தலைவர். சுரேஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர். தேவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர். சத்யா, அம்மா பேரவை செயலாளர். அமல்ராஜ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment