டிஜிட்டல் கிராப் சர்வே பணியை துவங்க முறையற்ற முறையில் அழுத்தம் கொடுக்கும் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 5 January 2024

டிஜிட்டல் கிராப் சர்வே பணியை துவங்க முறையற்ற முறையில் அழுத்தம் கொடுக்கும் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.


வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை செய்ய கொடுக்கப்படும் முறையற்ற அழுத்தத்தினை கண்டித்து  கருப்பு பேச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பா. சிவக்குமார் அவர்கள் தலைமையில் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை செய்ய கொடுக்கப்படும் முறையற்ற அழுத்தத்தினை கண்டித்து  கருப்பு பேச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு வாலாஜா வட்ட தலைவர் பழனி முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் பார்த்திபன், வட்ட பொருளாளர் திரு. அதியமான் மற்றும் வாலாஜா வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர்  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை செய்ய தேவையான உபகரணங்கள் கேட்டும், மற்றும் கூடுதல் பணி அலுவலர்களை நியமிக்க கோரியும் கோரிக்கை விடுத்தனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad