அரக்கோணம் அருகே அமைச்சர் ஆர். காந்தி தலைமையில் 24.69 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 January 2024

அரக்கோணம் அருகே அமைச்சர் ஆர். காந்தி தலைமையில் 24.69 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை!


ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் அரக்கோணம் ஒன்றியம் அன்வர்திகான்பேட்டை இரயில்வே நிலையத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம் ரூ.24.69 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜையிட்டு பணியினை தொடங்கி வைத்தார். 

இதில்  மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இ.ஆ.ப.. சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர். முனிரத்தினம், ஒன்றியக் குழு தலைவர். நிர்மலா சௌந்தர், தலைமை செயற்குழு உறுப்பினர். அசோகன், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் சௌந்தர், தமிழ்ச்செல்வன், எஸ். ஜி. சி. பெருமாள், பசுபதி, அரக்கோணம் நகர செயலாளர் வி.எல். ஜோதி, நெடுஞ்சாலை துறை திட்டங்கள் கோட்டப் பொறியாளர். சுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள். மங்கையர்கரசி சுப்பிரமணியன், அம்பிகா பாபு, சுந்தராம்பாள் பெருமாள், ஒப்பந்ததாரர். மாதையன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர். ராமலிங்கம், அரக்கோணம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர். ராகுல், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad