நெமிலியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 January 2024

நெமிலியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் நெமிலி மத்திய மற்றும் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள் தலைமையில் வீரவணக்கம் செலுத்தினர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர். சுந்தராம்பாள் பெருமாள் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். 

இதில் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். பி. ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், நெமிலி மேற்கு ஒன்றிய பொருளாளர். பிரகாஷ், அவை தலைவர். நரசிம்மன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். சேகர், சுற்றுச்சூழல் அணி. முரளி முகேஷ், ராஜராஜன், பிரசாத் மற்றும் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad