மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் 75-வது குடியரசு தின விழா. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 January 2024

மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் 75-வது குடியரசு தின விழா.


மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் 75-வது குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமை தாங்கினார்.

அசோசியேஷன் நிர்வாகிகள் அ.முஹம்மத் தமீம், எச்.முஹம்மத் ஹாஷிம், அ.முஹம்மத்‌ ஹலீம், வி.அன்சர் அஹ்மத் மற்றும் யி.முஹம்மத் உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அசோசியேஷன் துணைத் தலைவர் கே.முஹம்மத் இத்ரீஸ்‌  வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதிப்பிற்குரிய தமிழ்நாடு வணிகர்கள் சங்க மாநில கூட்டமைப்பு துணைத் தலைவர் மற்றும் ஆற்காடு தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ் (T2K) நிறுவனர் ஹாஜி எம்.ஷவுகத் அலி அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.


அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக மதிப்பிற்குரிய ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் டீ.விநாயக மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பேனாக்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்கள். அதனை தொடர்ந்து அசோசியேஷன் பொருளாளர் ஜி.முஹம்மத் பஹிம் அவர்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்பு  வழங்கினார்கள். அதனை தொடர்ந்து அசோசியேஷன் துணை செயலாளர் கே.ஓ.நிஷாத் அஹ்மத் அவர்கள் நன்றியுரையாற்றினார்.


- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad