75- வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திருமதி ச.வளர்மதி இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 January 2024

75- வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திருமதி ச.வளர்மதி இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.


நமது நாட்டின் 75- வது குடியரசு தினத்தை முன்னிட்டு இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி ச.வளர்மதி இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் ,காவல்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். பின்பு திரு. கருணாகரன்,   ஆயுதப்படை காவல் ஆய்வாளர்   அவர்களின் தலைமையிலான  காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 10 வருடங்கள் சிறப்பாக பணிபுரிந்த இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 26 காவல்துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பதக்கம் வழங்கப்பட்டது , மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுபணியாளர்கள் உட்பட 29 பேருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad