ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் 75 - வது குடியரசு தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர். சாந்தி ரவி, துணை தலைவர். கவிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கிராம நிர்வாக அலுவலர். நிரோஷா அவர்கள் கலந்து கொண்டார்.
பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு அங்கன்வாடி, ரோட்டு தெரு பகுதியில் ஒரு அங்கன்வாடி, வன்னியர் தெருவிற்கு சிமெண்ட் சாலை, இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம், சுத்தமான குடிநீர் போன்ற தீர்மாணங்களை இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர். இதில் ஊராட்சி செயலாளர். சௌமியா, கணக்காளர். பாலகுரு, மக்கள் நல பணியாளர். ஏகாம்பரம், வார்டு உறுப்பினர்கள். மோகனா அருள், ஞானபிராகசம், பொன்னுரங்கம், ஸ்ரீராமுலு, விஜயா துரை, டேங்க் ஆப்ரேட்டர். பிரசாத் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment