ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அகவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 75- ஆவது குடியரசு தின விழா ஒன்றிய கவுன்சிலர். கிருஷ்ணவேணி வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர். ஆஷா மார்கண்டேயன் தலைமையில் நடைபெற்றது. குடியரசு தின விழாவை முன்னிட்டு ஐயப்பன், மகேந்திரன் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற பொருட்களை வழங்கினர். இதில் தலைமை ஆசிரியர். சாவித்திரி, ஆசிரியர். புனிதா, நாட்டாண்மை. மீரா விநாயகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment