ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையத்தில் விசிக கட்சியின் சார்பில் நேற்று பிஜேபி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ராணிப்பேட்டை விசிக மத்திய மாவட்ட செயலாளர் சி.ம ரமேஷ் கர்ணா தலைமை தாங்கினார், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் பிரபு என்கிற பிரபாகரன் உள்ளிட்ட மாவட்டத் துணைச் செயலாளர் துரை கஜேந்திரன், தொகுதி துணைச் செயலாளர் சுரேஷ், மேற்கு மாவட்ட பொருளாளர் நல்லூர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கருத்தியல் பரப்பு செயலாளர் சிவி சந்தர் கலந்து கொண்டு பேசினார் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவித்து ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு போதிய நிவாரண நிதியாக 21,000 கோடி வழங்க வேண்டும். தமிழ்நாட்டை தீண்டத்தகாதவர் போல ஓரவஞ்சனை பார்க்க கூடாது போன்ற பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி பேசினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட ஒன்று நகர கிளை நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment