மக்கள் தேசம் கட்சியின் அரசியல் அதிகார கள ஆய்வு விழிப்புணர்வு கூட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 January 2024

மக்கள் தேசம் கட்சியின் அரசியல் அதிகார கள ஆய்வு விழிப்புணர்வு கூட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம், மக்கள் தேசம் கட்சியின் தமிழகத்தின் வட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்களுக்கு அரசியல் அதிகார விழிப்புணர்வு கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது  இந்த நிகழ்ச்சிக்கு  அக்கட்சியின் தலைவர் மூத்த வழக்கறிஞர் எ.ஆசைத்தம்பி  தலைமை தாங்கினார், மாநில வழக்கறிஞர் அணி தலைவர் ஜி கருணாநிதி வரவேற்புரை ஆற்றினார்.


ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் கே.விவேகானந்தன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜெ. மதியழகன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தலைவர் வி. சாந்தகுமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.ஆசை திவாகர்ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் இர. வேதமணி பறையர்,மாநில இளைஞரணி செயலாளர் டி.ஆசை கதிரவன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார் அதனைத் தொடர்ந்து  தலைவர் ஆசைத்தம்பியின் 52 ஆவது பிறந்தநாளையொட்டி  அவருக்கு ஆள் உயர மாலை அணிவித்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர் 


தலைவர் ஆசைத்தம்பி பேசுவையில் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது தான்  வாழ்வியல் முன்னேற்றத்திற்கான  ஒரே வழி என்று பல்வேறு அரசியல் தத்துவங்களை வலியுறுத்தி பேசினார் இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.வசந்தகுமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad