தலைமை நிலைய பேச்சாளர் தின புரட்சி ராஜேந்திரன் மற்றும் மாவட்டச் செயலாளர் சரவணன் கண்டன உரையாற்றினர், அவர்கள் பேசியபோது வீசி மோட்டூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக வாசுதேவன் என்பவர் செயல்பட்டு வருகிறார் தலைவரை விட அதிகாரிகளை விட பல கோடி பல கோடிகள் சம்பாதித்து வசதி வாய்ப்போடு இருக்கிறார், 18 வருடங்களாக ஒரே ஊராட்சியில் செயல்பட்டு வருகிறார் இவர் மூலமாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவபிரகாசம் ஆகியோர் நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள் வன்னியர் மக்கள் துரோகியான வாசுதேவனை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து பேசி அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவப்பிரகாசம் ஒன்றிய சேர்மன் சேஷா வெங்கட் ஆகியோர் 36 பஞ்சாயத்துகளிலும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்கள் காட்டேரி குப்பம் டேங்க் கட்டுமான பணி,வீசி மோட்டூர் சிமெண்ட் சாலைஅமைத்தல், செங்காடு மோட்டூர் சுடுகாட்டு சிமெண்ட் சாலை, ஒழுகூர் பஞ்சாயத்தில் போர்வெல் மற்றும் டேங்க் கட்டுமான பணி, வன்னிவேடு மோட்டூரில் சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் கட்டுமான பணி போன்ற பணிகளில் பல லட்சங்கள் ஊழல் செய்துள்ளனர் ஒரு சில இடங்களில் பணியை செய்யாமலேயே செய்து முடித்ததாக கணக்கு காட்டி உள்ளனர்.
அனைத்திற்கும் ஆதாரம் உள்ளதாக பட்டியலடங்கிய கவரை காண்பித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment