ராணிப்பேட்டை மாவட்டம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை கொண்டாடும் விதமாக வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஸ்ரீ ஆறுமுகசாமி திருக்கோவிலில் இந்து முன்னணி சார்பில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது, வாலாஜாபேட்டை இந்து முன்னணி நகரத் தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் நகர பொருளாளர் பிரபு, நகர ஒருங்கிணைப்பாளர் உமாபதி, நகர துணைத் தலைவர் பாலாஜி மற்றும் இந்து முன்னணி அமைப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.
No comments:
Post a Comment