மின்சாரவாரிய ஊழியரை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 January 2024

மின்சாரவாரிய ஊழியரை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்.


இராணிப்பேட்டை மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மேல்விஷாரம் நகரம் சார்பில் தமிழ்நாடு மின்சார வாரியம் இளநிலை பொறியாளர் சாதிக் பாஷா மேல்விஷாரத்தில் பொறுப்பு ஏற்றதிலிருந்து இரவு பகல் பாராமல் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான மின்சாரத்தை எந்த ஒரு இடையூறின்றி வழங்கி  இரவு எந்த நேரத்தில் அவரை தொடர்பு கொண்டாலும் உடனடியாக களத்திற்கு விரைந்து அதை சரி செய்து தந்து அனைத்து தரப்பு மக்களாலும் சிறந்த அரசு  ஊழியர் என்று பாராட்டு வருகின்றனர்  அவருடைய சேவையை பாராட்டி ஐமுமுக மேல்விஷாரம் நகரம் சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. 

மேல்விஷாரம் நகர தலைவர் பா சலாம் பேக், ஐமுமுக நகர பொருளாளர் ஹாபீஸ் அயாஸ், ஐமுமுக இராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் A.அப்துல் மதீன், ஐமுமுக நகரத் துணைச் செயலாளர்கள் ஆசிப் தமீம் இனாயத் ஐமுமுக தொண்டர் அணி செயலாளர் முஜம்மில் பொருளாளர் முஜம்மில் துனை செயலாளர் உவைஸ் ஐமுமுக மருத்துவ அணி நகர செயலாளர் ஹாஷிம் ஐமுமுக மகளிர் அணி நகர செயலாளர் சபீனா மகளிர் அணி நகரப் பொருளாளர் ஷாஹிதா மகளிர் அணி நகர துணைச் செயலாளர் பாசிலா வேப்பூர் ஆதம் பாய் ரத்தினகிரி ஜாகிர் போன்ற முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad