ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் பனப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட நல்லூர் பேட்டை பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் 75 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக மூன்றாம் வகுப்பு மாணவி பா.திவ்யா பாரத மாதா வேடமணிந்து முழங்கிய காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதில் சமூக செயற்பாட்டாளர். ஜனார்த்தனன், முக்கிய பிரமுகர்கள். பாஸ்கரன்,டீக்கன், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment