வாலாஜாப்பேட்டையில் ஒருங்கிணைந்த படை வீரர்கள் மற்றும் துணைவியர்களின் நல சங்கம் முதலாமாண்டு கொடியேற்று விழா. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 January 2024

வாலாஜாப்பேட்டையில் ஒருங்கிணைந்த படை வீரர்கள் மற்றும் துணைவியர்களின் நல சங்கம் முதலாமாண்டு கொடியேற்று விழா.


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் ஒருங்கிணைந்த படை வீரர்கள் மற்றும் துணைவியர்களின் நல சங்கம் முதலாமாண்டு கொடியேற்று விழா மற்றும் அலுவலகம் திறப்பு விழா நாட்டின் 75 ஆவது குடியரசு தின நாள் விழா அன்று நடைபெற்றது.  

ஒருங்கிணைந்த படை வீரர்கள் மற்றும் துணைவியர்களின் நல சங்கம் முதலாமாண்டு கொடியேற்று விழா மற்றும் அலுவலகம் திறப்பு விழா மிக சிறப்பாக சங்கத்தின் சட்ட ஆலோசகர் கே. வெங்கடேசன் தலைமையில் துவங்கப்பட்டது. இதில் தலைவர் எம்.வெங்கடேசன், துணைத் தலைவர் ஆனந்தன், செயலாளர் பரமசிவம், பொருளாளர் சேகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உமாசங்கர் இவர்களுடன் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்புடன் கொடியேற்று விழா மற்றும் அலுவலக திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. 


இதில் முன்னாள் படை வீரர்களின் நலனுக்காக துணைவியர்களின் பென்ஷன் பெறுவதில் ஏற்படும் சிரமங்களை சரி சிக்கலில் இருந்து சரி செய்ய வயது மூப்பின் காரணமாக மருத்துவமனை சிகிச்சைக்கு உதவிட குழந்தைகளின் பள்ளி கல்லூரி வேலைவாய்ப்பினை பெற்றிட உதவிட அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் உதவிகளைப் பெற்றுத் தர நல சங்கம் சிறப்பாக செயல்படுகிறது என முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.


- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்.

செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad