ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் கத்தியவாடி ரோடு அருகில் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களை இழிவுபடுத்தியும் அவர்களின் பெருமையை சிறுமைப்படுத்தியும் பேசிய தமிழக ஆளுநர் திரு R.N.ரவி அவர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேல்விஷாரம் நகரத் தலைவர் அப்துல் சுக்கூர் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி விநாயகம் ஏ.அம்மானுல்ல பாகவி முன்னாள் நகரத் தலைவர்கள் ஏ.அல்தாப் ஏ.அன்வர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆற்காடு நகரத் தலைவர் எஸ்.பியாரேஜான் ஆற்காடு வட்டாரத் தலைவர் எஸ் எம் வீரப்பா வாலாஜா நகர தலைவர் சி மணி ராணிப்பேட்டை நகரத் தலைவர் உத்தமன் குப்புசாமி காவேரிப்பாக்கம் பெருமாள் மாவட்ட செயலாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
No comments:
Post a Comment