அதைத்தொடர்ந்து தேமுதிக-வினர் தமிழகமெங்கும் கழக கொடியை முழு கம்பத்தில் பறக்க விட்டனர். அதன் ஒரு பகுதியாக நெமிலி அடுத்த வெளிதாங்கிபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட தேமுதிக செயலாளரும், சோளிங்கர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான. பி. ஆர். மனோகரன் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்த்தின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி தேமுதிக- வின் கழக கொடியை ஏற்றி வைத்தார்.
இதில் மாவட்ட பொருளாளர். அசோகன், த. செ. கு. உ. ஏகாம்பரம், கோபி, சரவணன், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். ஸ்ரீதர், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர். வினோத், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர். மூர்த்தி, பனப்பாக்கம் பேரூர் செயலாளர்.காவி, நெமிலி முன்னாள் ஒன்றிய செயலாளர்கள். வெங்கட்ரத்தினம், ரவி, பிரபாகரன், ஹேமலதா பாலாஜி, ஏகாம்பரம் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment