காவேரிப்பாக்கத்தில் மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டி படுகொலை உறவினர்கள், கட்சியினர் சாலை மறியல்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 1 February 2024

காவேரிப்பாக்கத்தில் மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டி படுகொலை உறவினர்கள், கட்சியினர் சாலை மறியல்!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர். விவேகானந்தர் என்பவரை காரில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள், மாநில துணை செயலாளர். விமல்குமார், மாநில மாணவர் அணி செயலாளர். பிரசாந்த், மாநில இளைஞர் அணி துணை செயலாளர். மதியழகன், மாநில வழக்கறிஞர் அணி தலைவர். கருணாநிதி மற்றும் மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் சமரசத்திற்கு பிறகு போராட்டக்காரர்கள் மறியலை விட்டனர். 

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad