நெமிலி அருகே தமிழக விவசாயி பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியல்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 13 February 2024

நெமிலி அருகே தமிழக விவசாயி பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியல்!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் பனப்பாக்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பனப்பாக்கத்தில் உள்ள அரக்கோணம்- ஒச்சேரி செல்லும் சாலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட செயலாளர். வஜ்ஜிரவேலு தலைமையிலும், மாவட்ட தலைவர் இயற்கை விவசாயி. பிரபாகரன் முன்னிலையிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது விவசாயிகள் அனைவரும் கையில் தேங்காய், நிலக்கடலை, எள் ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு தமிழக அரசின் ரேசன் கடைகளில் இந்தோனேஷியா மற்றும் மலேசியாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பாமாயிலை தடை செய்து தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளிடமிருந்து தேங்காய், நிலக்கடலை, எள் ஆகிய எண்ணெய் வகைகளை கொள்முதல் செய்து ரேசன் கடையில் மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். 


இதுக்குறித்து தகவலறிந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர். இலட்சுமிபதி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி வழக்கு பதிவு செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்பு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad