இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் சுகுமார் தலைமை தாங்கினார் ராணிப்பேட்டை நகர கழக செயலாளர் சந்தோசம் முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பிரமுகர் அம்பேத் ராஜன் பேசுகையில் ஐ ஏ எஸ், ஐ பி எஸ், ஆர்டிஓ, தாசில்தார் துணை தாசில்தார் போன்ற அதிகாரிகள் அம்பேத்கர் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி வகித்து வந்தாலும் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எத்தனை வன்கொடுமைகள் நடந்தாலும் குரல் கொடுக்காமல் மானங்கெட்ட அதிகாரிகளாக இருந்து வருகின்றனர்.
தலித் மாணவிகள் மற்றும் மக்கள் மீது கல்லெறிந்து இருக்கிறார்கள் திமுகவினர் இந்தக் கல் தேன் கூட்டில் விழுந்த கல்லை போல் இருக்கிறது ஓட்டு வங்கிகள் சிதறடிக்கப்பட்டுள்ளன திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு பதிவு செய்திருந்தாலும் சாட்சிட் போடாமல் மகளிர் போலீசார் நாடகம் ஆடி வருகின்றனர் இந்த ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை,நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கஞ்சா வியாபாரம் அதிகரித்து வருகிறது, கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
கருவறை முதல் கல்லறை வரை அம்மா நாட்டின் நலனை பாதுகாத்து வந்தார், மீண்டும் அம்மாவின் பொற்கால ஆட்சி மலர பாடுபட வேண்டும் என்றார், மேலும் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்க ஏழுமலை பேசுவையில் திமுக ஆட்சியில் தொடர்ந்து தலித் இன மக்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள் அவர்களிடம் ஓட்டை மட்டும் வாங்கிக் கொண்டு அவர்களின் நலனில் அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
மாவட்டச் செயலாளர் எஸ்.எம். சுகுமார் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ரேகா ஒப்பந்த அடிப்படையில் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் வீட்டில் ஏஜென்சி மூலமாக வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார், வேலை செய்ததற்கான சம்பளம் தராமல் ஏமாற்றியுள்ளனர் அடித்து துன்புறுத்தி உள்ளனர் இது என்ன நியாயம், சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் அடுக்கு மாடி கட்டிடத்தில் ஸ்ரீமதி என்ற பெண்ணை காம கொடூரர்கள் துரத்தி, கதற, கதற கற்பழித்து இருக்கிறார்கள்
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எம்ஜிஆர் மாணவர்களின் நலனில் அக்கறை உள்ளவராய் இருந்தார், பள்ளி, கல்லூரிகளை ஏற்படுத்தினார் அன்னபூரணி நமது அம்மா இலவச அரிசி, அம்மா உணவகம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து பொதுமக்கள் பயன் பெற செய்தார் எடப்பாடியாரும் மாணவர்களின் நலனுக்காக வேளாண்மை மற்றும் பொறியியல் கல்லூரிகளை கொண்டு வந்தார்.
அதில் 7 1/2 சதவீதம் உள் ஒதுக்கீடு, கொண்டு வந்து 600க்கும் மேற்பட்ட பெண்களை பட்டதாரிகளாக மாற்றி இருக்கிறார் பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் பட்டம் பெற்று சட்டம் படித்து இருந்தாலும் தலித் இன பெண்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுக்கவில்லை தற்போது திமுகவில் கூட்டணியில் இருக்கும் தலித் இனத் தலைவர் அமைதி காத்து வருகிறார் இரண்டு சீட்டுக்காக திமுக விடம் தொங்கிக் கொண்டிருக்கிறார் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் உட்கார வேண்டும்.
மரியாதை இல்லை எங்களிடம் வாங்க நீங்க கேட்கிற சீட்டு கொடுக்கிறோம் மரியாதையுடன் நடத்துகிறோம் உங்களால இரண்டு சதவீதம் ஓட்டு வாங்கி ஜெயித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலித் இன மக்களுக்கு குரல் கொடுப்பதே கிடையாது திமுக காரர்கள் எங்களைப் போன்று கூட்டம் போட்டால் பாதுகாப்புக்கு வருகிற பெண் போலீசை பார்த்தா? பின்னாடி தட்டுவான் ஆனால் நாங்க பெண் போலீசை பார்த்தா! அம்மா கொஞ்சம் ஒதுங்கு என்று மரியாதையாக சொல்லுவோம் ராணிப்பேட்டையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி வாய் கொழுப்பு எடுத்து திரிகிறார்.
நான் பேசிக் கொண்டிருக்கிற இதே இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வல்கராக பேசி இருக்கிறார் அதை நான் வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை திமுகவிற்கு அமாவாசை தொடங்கி விட்டது ஏற்கனவே இரண்டு பேர் சிறையில் களி திண்று கொண்டிருக்கிறார்கள் இன்னும் 22 அமாவாசைகள் மட்டும் தான் இருக்கிறது இதன் முடிவில் 32 அமைச்சர்களும் வரிசையாக சென்று விடுவார்கள்.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் இந்த தொகுதி மேம்பாட்டிற்கு ஒரு வேலை கூட செய்யவில்லை முதலமைச்சர் மு க ஸ்டாலின் மோடியை ஐந்து முறை சந்தித்திருக்கிறார் என்று முரசொலி பத்திரிக்கையில் வந்திருக்கிறது இந்த சந்திப்பில் யாரையேனும் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என் மகனை மாத்திரம் விட்டு விடுங்கள் என்று கெஞ்சியதாக கூறினார் சிறுபான்மையினரையும் தலித் மக்களையும் திமுகவினர் ஏமாற்றுகிறார்கள்.
எனவே சிந்தித்து வாக்களியுங்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவை வீட்டிற்கு அனுப்பி விட்டு 40 தொகுதியிலும் அதிமுகவினரை வெற்றி பெற செய்து பாராளுமன்றம் செல்ல வழி செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment