நெமிலியில் பெ. வடிவேலு தலைமையில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 28 February 2024

நெமிலியில் பெ. வடிவேலு தலைமையில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு‌ சித்தேரி கிராமத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சிக்காக நெமிலி ஒன்றிய பெருந்தலைவரும், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான பெ. வடிவேலு தலைமையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வீடு வீடாக சென்று பி.எல்.ஏ 2 மற்றும் பி.எல்.சி ஆகியோருடன்‌ பிரச்சாரம் செய்தார். 

இதில் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளருமான. பவானி வடிவேலு, பொதுக்குழு உறுப்பினர். அப்துல் நசீர், ஒன்றிய நிர்வாகிகள். புருஷோத்தமன், பாண்டியன், அரிகிருஷ்ணன், பாரதி, ஜெயச்சந்திரன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad