சோளிங்கரில் ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் சேவார்த்திகள் தங்கும் இல்லம் கட்டும் பணி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 5 March 2024

சோளிங்கரில் ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் சேவார்த்திகள் தங்கும் இல்லம் கட்டும் பணி!


இராணிப்பேட்டை மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் மலையடிவாரத்தில் ரூ. 2.46 கோடி மதிப்பீட்டில் சேவார்த்திகள் தங்கும் இல்லம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 

இதில் நன்கொடையாளர்கள். மிருநாளினி ஸ்ரீனிவாசன், சென்னை அண்ணாநகர் உதவி ஆணையர். ஜெயா, நகர மன்ற தலைவர். அ.தமிழ்ச்செல்வி அசோகன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர். ஜெ.இலட்சுமணன், தலைமை செயற்குழு உறுப்பினர். அ.அசோகன், மாவட்ட துணை செயலாளர். மு.சிவானந்தம், நகர செயலாளர். எம்.கோபி, சோளிங்கர் ஒன்றிய செயலாளர்கள். பூர்ணசந்திரன், சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர். பூர்ணிமா, ரவிச்சந்திரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad