நெமிலியில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 24 March 2024

நெமிலியில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் பங்குனி உத்திரம் ஸ்ரீ ஐயப்பன் பிறந்தநாளை முன்னிட்டு ஐயப்பா சேவா சங்கம் தலைவர் எஸ். சத்யமூர்த்தி அவர்கள் தலைமையில், அங்காளம்மன் மற்றும் கன்னியம்மன் அருள்பெற்ற அகவலம் ஏ.கே. செட்டியார் குருசாமி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கீழ்விதி சிவா குருசாமி, கே. செல்வம், நெமிலி சக்திவேல் மற்றும் ஐயப்பா பக்தர்கள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad