நெமிலியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 April 2024

நெமிலியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டாரக் கிளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நெமிலி தனியார் மண்டபத்தில் ஆசிரியர் தினவிழா மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா என இரு பெரும் விழா நடைபெற்றது. வட்டார தலைவர். தினகர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர். முருகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள். கிருஷ்ணன்,  தமிழ்ச்செல்வி, கலைச்செல்வி, கோபிநாதன், வட்டார கௌரவ தலைவர். குபேரசம்பத், சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர். சண்முகம் வரவேற்புரை வழங்கினார். உடன் மாநில துணை தலைவர். தேவராஜன், மாநில செயற்குழு உறுப்பினர். வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர். வீரபத்திரன்,  மாவட்ட தலைவர். வெங்கட்ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர். மல்லிகா,  அரக்கோணம் வட்டார  செயலாளர். சண்முக வடிவேல், வாலாஜா கிழக்கு வட்டார செயலாளர். கார்த்திகேயன், வாலாஜா மேற்கு வட்டார செயலாளர். அமித் கிளமெண்ட், ஆற்காடு வட்டார செயலாளர். நியூட்டன் கேபிரியேல், திமிரி வட்டார செயலாளர். சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களான. வையாபுரி, பூபாலன், செல்வம், சுசிலா, சாந்தி, வள்ளி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக லையோலா கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் வட்டார பொருளாளர். சீனிவாசன் நன்றி கூறினார்.

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad