தமிழக குரல் செய்தி எதிரொலி நெமிலியில் மக்கள் தேசம் கட்சியின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 April 2024

தமிழக குரல் செய்தி எதிரொலி நெமிலியில் மக்கள் தேசம் கட்சியின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் இல்லாததால் கோடை வெயிலின் தாகத்தை தவிர்க்க தண்ணீர் இல்லாமல் பயணிகள் கடும் அவதி என இரு தினங்களுக்கு முன் 25/04/24 அன்று நமது தமிழக குரலில் செய்தி வெளியானது அதன் எதிரொலியாக நெமிலி பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட மக்கள் தேசம் கட்சியின் சார்பில் நகர செயலாளர். ராஜேந்திரன் தலைமையில், ஒன்றிய செயலாளர். சதீஷ் முன்னிலையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர். வசந்த் குமார் கலந்து கொண்டு நீர்மோர், இளநீர், தர்பூசணி மற்றும் பழச்சாறுகள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் மாவட்ட மகளிர் அணி செயலாளர். ஜான்சி ராணி, காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர். ரஞ்சித், காவேரிப்பாக்கம் ஒன்றிய துணை செயலாளர். ராஜன், நெமிலி நகர துணை தலைவர். பூவரசு, நெமிலி நகர பொருளாளர். மாரி, நெமிலி நகர தலைவர். அமரேஷ் மற்றும் மக்கள் தேசம் கட்சி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad