இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, வாக்கு எண்ணும் மையமான வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம், சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித் தனி பாதுகாப்பு அறைகளில் (Strong Room) வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு பாதுகாப்பு பதிவேடுகளில் கையெழுத்திட்டார்கள் உடன் ராணிப்பேட்டை சரக துணை கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ஆய்வாளர் சால்மன் ராஜா துணை ஆய்வாளர் மகாராஜன், ஆகியோர் ஆய்வின் போது உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
No comments:
Post a Comment