நெமிலி மற்றும் பனப்பாக்கத்தில் சு.ரவி எம்.எல்.ஏ தேர்தல் பரப்புரை! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 13 April 2024

நெமிலி மற்றும் பனப்பாக்கத்தில் சு.ரவி எம்.எல்.ஏ தேர்தல் பரப்புரை!


ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி எம்.எல்.ஏ அவர்கள் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.எல் விஜயனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி நெமிலி மற்றும் பனப்பாக்கத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை க்ஷ சிறப்பாக செயல்பட்டு வந்தோம் பல்வேறு துறைகளில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது தற்போது போதைப்பொருள் நாடாக தமிழ்நாடு தலைகுனிந்து இருக்கிறது தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்துவிட்டது இதனால் தமிழக மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலை மாற தமிழக மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தேர்தல் பரப்புரை செய்தனர். 


இதில் மாவட்ட துணை செயலாளர். தயாளன், நெமிலி நகர செயலாளர். செல்வம், பொருளாளர். நவநீதகிருஷ்ணன், மாணவர் அணி செயலாளர். முருகன், கவுன்சிலர். சங்கர், நிர்வாகிகள். பரந்தாமன், சுகுமார், பனப்பாக்கம் நகர செயலாளர். மணிவண்ணன், அவைத்தலைவர். பழனியாண்டி, வட்ட கழக செயலாளர். சூரியன், அண்ணாநகர் கிளைக் கழக செயலாளர். பலராமன், முன்னாள் நகர செயலாளர். முனுசாமி, முன்னாள் கவுன்சிலர். சாந்தி வாசுதேவன், அம்மா இளைஞர் பாசறை செயலாளர். சுகுமார், கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகள். தேமுதிக நகர செயலாளர். காவி, நகர துணை செயலாளர். யுவராஜ், தேமுதிக வார்டு உறுப்பினர். தயாளன், மாவட்ட பிரதிநிதி. புண்ணியகோட்டி, இளைஞரணி செயலாளர். பூவண்ணன், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். ஸ்ரீதர், வழக்கறிஞர். அன்பழகன் மற்றும் மற்றொரு கூட்டணியான மக்கள் தேசம் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad