எங்களுக்கு இரவு பெரிதல்ல உதயசூரியனின் உதயமே பெரியது எஸ்.ஜி.சி பெருமாள்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 13 April 2024

எங்களுக்கு இரவு பெரிதல்ல உதயசூரியனின் உதயமே பெரியது எஸ்.ஜி.சி பெருமாள்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த செல்வமந்தை, மேல்களத்தூர், பாலாபுரம், அருந்ததியர் பாளையம்  ஆகிய இடங்களில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு இரவிலும் பாராமல் வாக்கு சேகரித்தார். 


அப்போது நமது இதழுக்காக அவரை சந்தித்தபோது எங்களுக்கு இரவு பெரிதல்ல உதயசூரியனின் உதயமே பெரியது எங்கள் வெற்றி வேட்பாளரை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இதுவே எங்கள் இலக்கு, தமிழக முதல்வரின் நல்லாட்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடங்கி மகளிர் உரிமைத்தொகை முதல் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை செய்து வருகிறார். அவரின் சாதனைகளே எங்கள் வெற்றி வாக்கு என தெரிவித்தார். 

செல்வமந்தை கிராமத்தில் ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன் ஏற்பாட்டில் செந்தில் அவர்களின் தலைமையில் வாத்திய குழுவினர் வாத்தியங்கள் முழங்க எஸ்.ஜி.சி பெருமாளுக்கு வரவேற்புடன் நெமிலி மத்திய ஒன்றியம் சார்பில் தொடர்ந்து எட்டாவது நாளாக தேர்தல் பரப்புரை செய்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய கழகத் துணைச் செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி. எல்லப்பன், விவசாய அணி. சதீஷ், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி. வெங்கட், தனஞ்செழியன், நெமிலி மத்திய ஒன்றிய மகளிர் அணி. நித்தியா, நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ், கிளை கழக நிர்வாகிகள். வடகண்டிகை மூர்த்தி, நாகவேடு விஜி, அரும்பாக்கம் பெருமாள், பிரதிப், செல்வமந்தை கிளை கழக நிர்வாகிகள். சீனிவாசன், பார்த்திபன், பெருமாள், ஓபையா, மேல்களத்தூர் கிளை நிர்வாகிகள். குணசேகரன், மணிகண்டன், மணி, கதிரவன், பாலாபுரம் மேகநாதன், அருந்ததியர்பாளையம் சேகர் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad