ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இன்று (29.04.2024) 07.அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குப்பட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வீடியோ பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைக்காட்சிகளில் வீடியோ பதிவுகளை பார்வையிட்ட ஆய்வு செய்தார்கள்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பார் கிரண் ஸ்ருதி, இ.கா.ப, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ் ஆகியோர் உள்ளனர் வட்டாட்சியர் வெங்கெடேசன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராணிப்பேட்டை சரகம் பிரபு வாலாஜா காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா உதவி ஆய்வாளர் மகாராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- ஆர்ஜே.சுரேஷ்.
No comments:
Post a Comment