தமிழ்நாடு முழுவதும் நிலவும் கடும் கோடை வெப்பத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தாகம் தீர்த்திடும் வகையில் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் பொதுமக்களுக்கு தண்ணீர், மோர் பந்தல்களை திறந்து வைத்து இளநீர், தர்பூசணிபழம், முலாம்பழம், நுங்கு, வெள்ளரிக்காய், குளிர்பானங்கள், மோர் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் திமுகவின் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் AK. சுந்தரமூர்த்தி, நகர செயலாளர் தில்லை, நகர பொருளாளர் சசிகுமார், நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, தலைவர் கமல் ராகவன், அவைத்தலைவர் ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதி விஜயராகவன், கவுன்சிலர்கள் பிருந்தா சிலம்பரசன், பரிதா சலாம், செங்கையபாபு, நகர இளைஞரணி உமர், மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.
- செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9150223444..
No comments:
Post a Comment