நெமிலி அருகே சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ரெட்டிவலம் கிராமத்தில் பனையாழி அம்மன் கோவில் திருவிழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 April 2024

நெமிலி அருகே சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ரெட்டிவலம் கிராமத்தில் பனையாழி அம்மன் கோவில் திருவிழா!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த ரெட்டிவலம் கிராமத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பனையாழி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், பிற்பகல் 12:30 மணிக்கு மகா தீபாராதணையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மந்தைவெளிக்கு சாமி வருதல் நிகழ்ச்சியில் இளைஞர்களின் காளை மாடு விளையாட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. ரெட்டிவலம் கிராம பொதுமக்கள் சார்பில் பனையாழி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad