ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் சி எம் அண்ணாமலை பில்டர்ஸ் சார்பில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 1 May 2024

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் சி எம் அண்ணாமலை பில்டர்ஸ் சார்பில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது.


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் சி எம் அண்ணாமலை பில்டர்ஸ் சார்பில் உழைப்பாளர் தினம்  கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிஎம் அண்ணாமலை பில்டர்ஸ் நிறுவனர் தமிழரசன் தலைமை தாங்கினார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  அமைச்சர் ஆர் காந்தி, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம்  ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சி எம் அண்ணாமலை பில்டர்ஸ்  நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள், டிசைனர்கள், கட்டுமான பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், எலக்ட்ரீசியன் என அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுப் பொருட்கள் வழங்கினார்கள். மேலும் அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்தனர்.


இந்த நிகழ்ச்சி மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம் நகராட்சி துணைத் தலைவர் பழனி , மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் சண்முகம், மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் பூர்ணிமா ரவிச்சந்திரன், நகர செயலாளர் கோபி, காங்கிரஸ் நகர தலைவர் கோபால், நகராட்சி கவுன்சிலர்கள் அன்பரசு லோகேஸ்வரி சரத்பாபு ,ராதா வெங்கடேசன், கணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad